பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 18 வயதின் கீழ் பிரிவில் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை சம்பியன் பட்டம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியது.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் அகில இலங்கை போட்டிக்கு பு/வெட்டாளை அசன்குத்தூஸ் மு.வித்தியாலயம் இன்று (2025.07.15) புத்தளம் எருக்கலம்பிட்டி மு.வித்தியாலயத்தில் நடைபெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் வெ/ஜோன்போல் அணியை 2:1 கோல் கணக்கில் வெற்றி பெற்று அகில இலங்கை போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது
கடந்த இரண்டு தினங்களாக புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில், 18 வயதின் கீழ் பிரிவில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை மற்றும் வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை ஆகியன பலப்பரீட்சை நடத்தின.
இதில் ஆரம்பம் முதல் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை 2:1 கோல் கணக்கில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியதுடன் இரண்டாம் இடத்தை வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை பெற்றுக்கொண்டது.
இதேவேளை மூன்றாவது இடத்தை பெரும் அணியை தெரிவுசெய்வதற்காக இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 2:0 அடிப்படையில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி, புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணியை வீழ்த்தி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
