ஜூட் சமந்த
மாதம்பே – செம்புகட்டிய பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாகப் பெருமளவிலான தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீப்பரவலானது மதியம் 3.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவு வரவழைக்கப்பட்டது. இவர்களுடன் இணைந்து மாதம்பே பொலிஸாரும் பிரதேச மக்களும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்ட காணியில் இருந்த பெருமளவிலான தென்னை மரங்கள் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



