எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 20 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயும் நட்டத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார். இந்த ஆதரவு பொறிமுறைக்காக அரசாங்கத் திறைசேரி மேலதிகமாக 20 பில்லியன் ரூபாய் சுமையை ஏற்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.
- லங்கா ஓட்டோ டீசல்: ஒரு லீற்றர் 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 382 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சூப்பர் டீசல்: ஒரு லீற்றர் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 443 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒக்டேன் 95 பெட்ரோல்: ஒரு லீற்றர் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 455 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒக்டேன் 92 பெட்ரோல்: ஒரு லீற்றர் 81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 398 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது


