Friday, November 7, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூபா 5,000 கொடுப்பனவு!

மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூபா 5,000 கொடுப்பனவு!

  • தமது பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்கு  புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான  செலவைக் குறைத்து அவர்களின்  கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா  6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் நாம்  தொடர்ந்து வழங்குவோம். இந்நோக்கத்திற்காக அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூபா 9,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கல்வி, அனைத்து பிள்ளைகளினதும் அடிப்படை உரிமையாகக் கருதப்படுவதனால் அனைவரையும் உள்ளடக்கும் கல்வியினூடாக மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கல்வியில் மாற்றுத்திறன்கூடிய பிள்ளைகளின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றது. மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000  கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு  செலவுத்திட்டத்திலிருந்து ரூபா  50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.
  • கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளும்  மாணவர்களின்  எண்ணிக்கை 43,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையானது  பல பிரச்சனைகளைத் தோற்றிவித்துள்ளது.  எனவே, மாணவர்களுக்கான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொது​ கற்றல் பிரதேசங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு  ரூபா 2,500 மில்லியன் ஒதுக்கீடு   செய்யப்பட்டுள்ளது.
RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூபா 5,000 கொடுப்பனவு!

  • தமது பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்கு  புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான  செலவைக் குறைத்து அவர்களின்  கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா  6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் நாம்  தொடர்ந்து வழங்குவோம். இந்நோக்கத்திற்காக அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூபா 9,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கல்வி, அனைத்து பிள்ளைகளினதும் அடிப்படை உரிமையாகக் கருதப்படுவதனால் அனைவரையும் உள்ளடக்கும் கல்வியினூடாக மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கல்வியில் மாற்றுத்திறன்கூடிய பிள்ளைகளின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றது. மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000  கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு  செலவுத்திட்டத்திலிருந்து ரூபா  50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.
  • கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளும்  மாணவர்களின்  எண்ணிக்கை 43,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையானது  பல பிரச்சனைகளைத் தோற்றிவித்துள்ளது.  எனவே, மாணவர்களுக்கான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொது​ கற்றல் பிரதேசங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு  ரூபா 2,500 மில்லியன் ஒதுக்கீடு   செய்யப்பட்டுள்ளது.
RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular