இன்று (20), Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (All Ceylon YMMA Conference) 75வது ஆண்டு மாநாட்டில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
சமூகத்திற்கும் நாட்டிற்கும் விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கியதற்கான அங்கீகாரமாக, “The Y Personality of the Year 2025” என்ற விருதை இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
— ஊடகப் பிரிவு