மெய்நிகர் நகரத்தை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தின் (Virtual city creation project) முன்னோடிக் கருத்திட்டமாக யுனெஸ்கோ உலக மரபுரிமையாக இருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகை உள்ளிட்ட கண்டி நகரம் Virtual city in Kandy எனும் பெயரில் நிர்மாணிப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தின் முதலாவது பகுதியாக கண்டி நகரத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுலாத்துறை ஆற்றல் வளங்களுடன் கூடிய இடங்களாக முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
அந்த வகையில் 58 இடங்கள் முதல் கட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டத்தின் இரண்டாவது பகுதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகை வளாகம் மற்றும் அதனை அண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுமான 20 இடங்களை தொழிநுட்ப ரீதியாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுவனங்களுக்குள்ள ஆற்றல் வளங்கள் மற்றும் துரித இயலுமைகள் தொடர்பாகவும், குறித்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முற்கூட்டிய உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் குறித்த கருமங்களுக்காக ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய Clean Srilanka கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் மூலம் Virtual city in Kandy கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.