Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமோட்டார் சைக்கிளை ஆட்டைய போட்ட இருவர் அதிரடி கைது!

மோட்டார் சைக்கிளை ஆட்டைய போட்ட இருவர் அதிரடி கைது!

ஜூட் சமந்த

வீட்டின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை தன்கொடுவ போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தன்கொடுவ மத்திய கடுகெந்த மற்றும் கோணவில பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி குருநாகல்-மல்கடுவாவ பகுதியில் இருந்து தன்கொடுவ பகுதியில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டுக்கு வருகை தந்த சகோதரரின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே அன்றைய இரவு நேரம் திருடப்பட்டுள்ளது.

விடயம் தொடர்பில் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் மேற்படி சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

மோட்டார் சைக்கிளை ஆட்டைய போட்ட இருவர் அதிரடி கைது!

ஜூட் சமந்த

வீட்டின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை தன்கொடுவ போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தன்கொடுவ மத்திய கடுகெந்த மற்றும் கோணவில பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி குருநாகல்-மல்கடுவாவ பகுதியில் இருந்து தன்கொடுவ பகுதியில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டுக்கு வருகை தந்த சகோதரரின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே அன்றைய இரவு நேரம் திருடப்பட்டுள்ளது.

விடயம் தொடர்பில் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் மேற்படி சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular