Saturday, August 2, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsயானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த.கயசீலன், படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்திருந்தார். 

இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular