யாழ் ராணி புகையிரத்துடன் மோதி பளை கச்சாய்வெளி பகுதியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட யாழ் ராணி புகையிரதம் காலை 7.30 மணியளவில் பளை கச்சாய்வெளி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் பளை தம்பகாமம் பகுதியைச்சேர்ந்த 4 6வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
