19 வயது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
16வது இளையோர் 19 வயது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே, நமிபியாவில் கடந்த ஜன. 15ம் தேதி துவங்கியது. இதன் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் நேற்று ஹராரே மைதானத்தில் மோதின.
இறுதிப் போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இ்நதிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன் குவித்தது.
துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூரியவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. சாதித்து காட்டிய இளம்படைக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடியை பரிசாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



