பண்முகப்படுத்தப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரணைமடு குளத்தில் நன்னீர் மின்பிடியில் ஈடுபடும் இரண்டு மீனவ சங்கங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கியிருந்தார்.
மக்களுடைய வரிப்பணத்தில் திறைசேரிக்கு செல்லும் நிதி மூலமே மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் செழிப்பான ஆண்டாக மாற்றுவோம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து முதலமைச்சர் வேட்பாளரை நியமிப்பதற்கான முயற்சி தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.
இவர்களின் நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது அல்ல, திரும்பவும் ரணில் மகிந்தவை கொண்டு வந்து தாங்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கு என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




