ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு முந்தைய அமெரிக்க அரசு ஆதரவாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறிவிட்டன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், உக்ரைனை ஒதுக்குகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வதிகாரி என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்க வேண்டும் என அவசியம் இல்லை. அவருக்கு அங்கு வேலையே இல்லை. ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும்.
ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் செய்வதை தடுத்து நிறுத்துகிறார். புடினை நல்லவராகவோ அல்லது சிறந்தவராகவோ மாற்ற முயற்சிக்கவில்லை. போர் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.