உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் மூலம் வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு 24மில்லியன் ரூபா பெறுமதியான உழவியந்திரம் மற்றும் வயல் மட்டப்படுத்தும் இயந்திரங்கள் இன்று 31.10.2025 வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பிரதித்திட்டமிடல் அலுவலகத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் A.C பாபு தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உலக வங்கியின் பணிக்குழு தலைவர் Dr Sheu Salau கலந்து கொண்டு குறித்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் திட்டப்பணிப்பாளர் சமன் பந்துலசேன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




 
 
 
