இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், அணியின் தற்போதைய தலைமை பயிற்றுநருமான சனத் ஜெயசூரியா கிளிநொச்சிக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டார்.
கிளிநொச்சிக்கு மத்திய கல்லூரி மைதானத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜெயசூரியா இன்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டார்.
குறித்த மைதானத்தை புற்தரை மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் கிரிக்கெட் துறையை வளர்க்கும் நோக்குடன் மைதானத்தை பார்வையிட்டதாக தெரிவித்தார்.
குறித்த விஜயத்தின்போது பாடசாலையின் முதல்வர் சவரி பூலோகராஜா, மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர்.
