கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும், பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல் அகல்வுக்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் கடல்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி, யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், கண்டாவாளை பிரதேச செயலாளர் பிருந்தகன் மற்றும் நீர் பாசன தினைக்களத்தின் குழுவினர்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

கல்லாறு பகுதியில் காணப்பட்ட பறவைகள் சரணாலயம் முற்றாக அளிக்கப்பட்டு உள்ளதுடன், கடல் நீர் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு உள்வரும் அபாய நிலையில் தோன்றியுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.
தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முற்று முழுதாக அழிவடைந்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவ காவலர் அமைத்து இங்கு இடம் பெறுகின்ற சட்ட விரோத மணல் அகல்வினை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடத் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.