Saturday, June 14, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் அரசு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

வடக்கில் அரசு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்று (13-06-2025) நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை இலகுவாக வழங்கும் வகையில் நடைமுறைப் படுத்தும் செயலியை அங்குராணம் செய்யும் நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன், மற்றும் துறை சார்ந்த திணைக்களின் தலைவர்கள், பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணைய வழி பங்கீட்டு அட்டையும் வழங்கி வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular