Wednesday, October 29, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் இனி GovPay ஊடாக போக்குவரத்து அபராதம்!

வடக்கில் இனி GovPay ஊடாக போக்குவரத்து அபராதம்!

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் பொது சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த முயற்சியின் மூலம், GovPay ஊடாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை செயல்படுத்தும் இலங்கையின் மூன்றாவது மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது

இவ் உத்தியோகபூர்வ நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

பொலீஸ் அத்தியட்சகர் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வட மாகாணத்தில் உள்ள 6 போக்குவரத்து பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கான தொடர் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்றுவருகின்றது. அதன்படி அக்டோபர் 26 அன்று வவுனியாவிலும், அக்டோபர் 27 அன்று கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தப்பட்டன. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay உடன் இணைந்து இலங்கை காவல்துறை ஏற்பாடு செய்த இந்த அமர்வுகளில் சுமார் 400 போக்குவரத்து பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வட மாகாணத்தில் உள்ள வாகன சாரதிகள் தற்போது GovPay உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு இணையத்தள அல்லது மொபைல் வங்கி செயலி அல்லது டிஜிட்டல் கட்டண செயலி மூலமாக, குறித்த இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களை வசதியாகவும், பாதுகாப்பாகவும், உடனடியாகவும் செலுத்த முடியும்.

தற்போது, 14 வங்கிகளின் இணையவழி மற்றும் மொபைல் வங்கி தளங்கள் மற்றும் 6 FinTech செயலிகள் மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம். இதில் BOC FLEX செயலி, சம்பத் விஸ்வா, HNB டிஜிட்டல் வங்கி மற்றும் SOLO, NSB Pay. Peoples’ Pay, ComBank Digital, DFCC , Nations Direct வங்கி NDB Neos இணையத்தள வங்கி, NSB இணையவழி வங்கி, பான் ஏசியா இணையவழி வங்கி, SDB இணையவழி வங்கி Seylan இணையவழி வங்கி, LB Finance CIM, WEBXPAY, FriMi, Genie, Helakuru L iPay மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம்.

ஏப்ரல் 2025 இல் ஸ்தலத்திலான போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, GovPay வழியாக 23,539 ஸ்தல அபராதங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இது ரூ.31 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.

பெப்ரவரி 2025 இல் தொடங்கப்பட்ட GovPay என்பது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay இன் ஒரு கூட்டு முயற்சியாகும். இது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. GOVPAY போக்குவரத்து அபராதத் திட்டம் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள டிஜிட்டல் பணிக்குழுவால் முன்னெடுக்கப்படுகிறது. பொதுமக்களை அரச சேவைகளுக்கான பணத்தினை

ஒன்லைனில் மிகவும் இலகுவாகவும் பாதுகாப்பகவும் உரிய நேரத்தில் செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்க சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.

GovPay மூலம் இன்றுவரை, 2,700 அரச சேவைகளில் ரூ. 407 மில்லியனுக்கும் அதிகமான சுமார் 35,000 டிஜிட்டல் கொடுப்பனவுகள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்ள பொது மக்களை ஊக்கப்படுத்தி, நாட்டின் டிஜிட்டல் மாற்ற பயணத்திற்கு வலுசேர்த்து, அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் GovPay தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

வடக்கில் இனி GovPay ஊடாக போக்குவரத்து அபராதம்!

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் பொது சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த முயற்சியின் மூலம், GovPay ஊடாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை செயல்படுத்தும் இலங்கையின் மூன்றாவது மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது

இவ் உத்தியோகபூர்வ நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

பொலீஸ் அத்தியட்சகர் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வட மாகாணத்தில் உள்ள 6 போக்குவரத்து பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கான தொடர் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்றுவருகின்றது. அதன்படி அக்டோபர் 26 அன்று வவுனியாவிலும், அக்டோபர் 27 அன்று கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தப்பட்டன. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay உடன் இணைந்து இலங்கை காவல்துறை ஏற்பாடு செய்த இந்த அமர்வுகளில் சுமார் 400 போக்குவரத்து பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வட மாகாணத்தில் உள்ள வாகன சாரதிகள் தற்போது GovPay உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு இணையத்தள அல்லது மொபைல் வங்கி செயலி அல்லது டிஜிட்டல் கட்டண செயலி மூலமாக, குறித்த இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களை வசதியாகவும், பாதுகாப்பாகவும், உடனடியாகவும் செலுத்த முடியும்.

தற்போது, 14 வங்கிகளின் இணையவழி மற்றும் மொபைல் வங்கி தளங்கள் மற்றும் 6 FinTech செயலிகள் மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம். இதில் BOC FLEX செயலி, சம்பத் விஸ்வா, HNB டிஜிட்டல் வங்கி மற்றும் SOLO, NSB Pay. Peoples’ Pay, ComBank Digital, DFCC , Nations Direct வங்கி NDB Neos இணையத்தள வங்கி, NSB இணையவழி வங்கி, பான் ஏசியா இணையவழி வங்கி, SDB இணையவழி வங்கி Seylan இணையவழி வங்கி, LB Finance CIM, WEBXPAY, FriMi, Genie, Helakuru L iPay மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம்.

ஏப்ரல் 2025 இல் ஸ்தலத்திலான போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, GovPay வழியாக 23,539 ஸ்தல அபராதங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இது ரூ.31 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.

பெப்ரவரி 2025 இல் தொடங்கப்பட்ட GovPay என்பது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay இன் ஒரு கூட்டு முயற்சியாகும். இது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. GOVPAY போக்குவரத்து அபராதத் திட்டம் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள டிஜிட்டல் பணிக்குழுவால் முன்னெடுக்கப்படுகிறது. பொதுமக்களை அரச சேவைகளுக்கான பணத்தினை

ஒன்லைனில் மிகவும் இலகுவாகவும் பாதுகாப்பகவும் உரிய நேரத்தில் செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்க சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.

GovPay மூலம் இன்றுவரை, 2,700 அரச சேவைகளில் ரூ. 407 மில்லியனுக்கும் அதிகமான சுமார் 35,000 டிஜிட்டல் கொடுப்பனவுகள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்ள பொது மக்களை ஊக்கப்படுத்தி, நாட்டின் டிஜிட்டல் மாற்ற பயணத்திற்கு வலுசேர்த்து, அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் GovPay தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular