Tuesday, April 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் சிக்கிய பெருந்தொகை கேரள கஞ்சா!

வடக்கில் சிக்கிய பெருந்தொகை கேரள கஞ்சா!

121 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சியில் கடற்படையினரால் கைது.

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை கடல் பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சுமார் முன்னூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்தனர்.

சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை அவதானித்து சோதனை செய்தபோது, குறிப்பிட்ட டிங்கி படகில் இருந்து முந்நூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் சந்தேக நபர் ஒருவரையும் (01) கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, இதன் மதிப்பு நூற்று இருபத்தொரு (121) மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மரதன்கேனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular