Tuesday, July 1, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் சிக்கிய பெருமளவிலான கேரள கஞ்சா!

வடக்கில் சிக்கிய பெருமளவிலான கேரள கஞ்சா!

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடந்த (2025 ஜூன் 27) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ரூபா 47 மில்லியனுக்கும் அதிகமான சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களும், ஒரு டிங்கி (01) படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, காரைநகர் கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் எலாராவுக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணித்து வருவது கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, ஆறு (06) பைகளில் எழுபத்து மூன்று (73) பொதிகளில் பொதிச்செய்யப்பட்டிருந்த சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவுடன், மூன்று (03) சந்தேக நபர்களையும் (01) டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நாற்பத்து ஏழு மில்லியன் (47) ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 43 வயதுக்குட்பட்ட குருநகர் மற்றும் அனலைத்தீவு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular