இலங்கை கடற்படையினரின் இன்றைய (2025 மார்ச் 03) விசேட அதிரடி நடவடிக்கையில், யாழ்ப்பாணம் அனலைத்தீவின் வடக்கு கடலில் நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், டிங்கி படகொன்றும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துடன் கடற்படையின் விசேட கப்பல் படையணி குழுவொன்றும் இணைந்து யாழ்ப்பாணம் அனலைத்தீவு வடக்கடலில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.
அங்கு, குறித்த டிங்கி படகில் இந் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த எழுபத்தி எட்டு (78) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட சுமார் நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோ நானூறு (400) கிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி எழுபத்தி எட்டு (78) மில்லியன் ரூபா என நம்பப்படுவதுடன், மேலும் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 மற்றும் 43 வயதுடைய பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் காரைநகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.