Monday, March 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு!

வடக்கில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றது.

சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு, கூட்டுறவு மண்டபத்தில் 08.03.2025 இன்று காலை 10.00 மணியளவில் சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி திருமதி முராளினி தினேஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பங்குபற்றியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர அதிதிகளாக கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular