வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம் குறித்த இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய பொது போக்குவரத்தின்போது பொது மக்களுக்கான அசெளகரியங்கள், இடர்பாடுகளை முறையிடுவதற்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கட்டமைப்பின் நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான புதிய அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணிகள் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த செயற்பாடு கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பதில் அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

