கிளிநொச்சியில் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கஅவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்
வரலாற்றில் முதல்முறையாக வடமாகாணத்தில் ஜனாதிபதி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் சந்தி இளைஞர்களின் ஏற்பாட்டினால் நேற்று 24.11.2025 மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அவர்களின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு சுண்டிக்குளம் சந்தி இளைஞர்களினால் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வீதியில் சென்ற மக்களுக்கு கேக், இனிப்பு வகைகளையும் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞர்கள்;
முன்னைய ஆட்சியாளர்கள் எவரும் சொன்னதை செய்வதில்லை, தற்போதைய ஜனாதிபதி கூறிய வாக்குறுதிகளை செயல்படுத்தி வருகிறார். போதை பொருளை முற்றும் முழுதாக அளித்து இளைய தலைமுறைகளை போதைப் பொருளிலிருந்து மீட்டெடுத்து, நாட்டின் போதை பொருளை முற்று முழுதாக ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை எமக்கு பிடித்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தற்போதைய ஜனாதிபதி இராணுவத்தினரை அகற்றுவதாகவும் தற்போதைய அரசாங்கத்தில் மக்களுக்கான பேச்சு சுதந்திரத்தை முற்றும் முழுதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் தமது தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அனைத்து திணைக்கலங்களும் செயற்பட்டு வருவதை முழு மனதுடன் வரவேற்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





