Friday, April 11, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கு கடற்பிரதேசங்களில் விஷேட சுற்றிவளைப்பு!

வடக்கு கடற்பிரதேசங்களில் விஷேட சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் றமேஸ்கண்ணா தலைமையிலான விஷேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் கிராஞ்சி பகுதியில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்த நிலையில், விஷேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

இதன் போது பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டன. இவற்றிற்கு எவரும் உரிமை கோராத நிலையில் குறித்த பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular