வவுனியா, மன்னார் பிரதான வீதியில் புகையிரத்துடன் பட்டா வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பட்டாவை வாகனத்தை செலுத்திவந்த தந்தை இரண்டு பிள்ளைகளையும் பட்டாவுக்குள் விட்டு விட்டு பாய்ந்து தப்பியுள்ளதுடன், இரண்டு பிள்ளைகளும் பெரும் காயங்களுடன் வவுனியா பைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ் சென்று கொண்டிருந்த ரயிளுடனே குறித்த பட்டா வாகனம் விபத்தில் சிக்கியது.
வவுனியா, மன்னார் பிரதான வீதியில் அமைந்திருக்கும் ரயில்வே கடவையின் கதவை மூடாததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், கதவை மூடும் பணியாளர் குறித்த நேரத்தில் கதவை மூடி திறக்கும் அறையில் இருக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பட்டா வாகனத்தில் இரண்டு குழந்தைகளுடன் பயணித்த தகப்பனார், ரயில் வருவதைக் கண்டு வாகனத்தை விட்டு அவசரமாக பாய்ந்து உள்ளார்.
இரண்டு குழந்தைகளும் விபத்தில் சிக்கி கடும் காயங்களுடன் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.