வவுனியா மாநகரசபைக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.
அந்தவகையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாகப் போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனடிப்படையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் வவுனியா மாநகரசபையின் புதிய முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் 11 வாக்குகளையும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினரான பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.