கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் வீழ்ச்சி வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளதுடன், சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படுகின்ற செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில், வாழைக்குலைகளை மரத்துடன் அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
