சூட்சுமமான முறையில் 500.011 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டியில் மறைத்து கொண்டு சென்ற இருவர் விஷேட அதிரடிப்படையால் கோணஹென பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வென்னப்புவ நகரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொன்வேவ, நாகொல்லாகமவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணும், தெற்கு ரத்மலை, நாகொல்லாகமவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
ஹஷிஸ் போதைப்பொருள், முச்சக்கர வண்டி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்க சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.