ஜூட் சமந்த
நாத்தாண்டியா – வலஹாபிட்டிய பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி ஹாமில்டன் கால்வாய்க்குள் (Hamilton Canal) வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து கடந்த 24 ஆம் திகதி நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. நாத்தாண்டியா பகுதியிலிருந்து மாதம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர் விபத்துக்குள்ளான வேனின் ஓட்டுநர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்தை அடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வேன் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


