கொட்டாவ, மலபல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 120 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி ரயில்வே துறையின் காணிகளில் வசிப்பவர்களுக்கு விரைவில் கையளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் இறுதி நிலையை எட்டியுள்ளது.
கொட்டாவ மலபல்லயில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரு வீட்டுத் தொகுதியின் முன்னேற்றத்தை சரிபார்க்கும் சிறப்பு ஆய்வுப் பணியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இன்று (2025.05.28) கலந்து கொண்டார்.
தற்போது ரயில்வே துறைக்குச் சொந்தமான காணிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றும் நோக்கில் கட்டப்பட்ட இந்த வீட்டுத் தொகுதியில் 120 வீடுகள் அமையப்பெற்றுள்ளதுடன், நாவின்ன முதல் பாதுக்கை வரையிலான ரயில்வே காணிகளில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் இந்த வீட்டுத் தொகுதியில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.
ஏற்கனவே பெரும்பாலான நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள இந்தத் திட்டத்தை விரைவாக முடித்து பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
