ஜெர்மனியின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் BOSCH-ல் இருந்து 13,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து தாறுமாறாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பாதிப்புகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தியாவை குறிவைத்து அதிகளவு நடவடடிக்கை எடுத்து வருகிறார். விசா விவகாரம் தொடங்கி வரி உயர்வு வரை உள்ள நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால் வாகன உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.
