இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அஹமதாபாத் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் விளையாடவுள்ளன.
2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணி 2ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.