வெடிக்காத நிலையில் இனங்காணப்பட்டுள்ள செல்!
இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட 10 வீட்டு பகுதியின் தனியார் காணியில் வெடிக்காத நிலையில் உள்ள பீப்பாய்செல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1990 யுத்த காலத்தில் இப்பகுதியில் பகுதியில் இராணுவத்தினால் ஏவப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீப்பாய்செல் ஒன்று தனியார் காணி உரிமையாளர் அவரது காணியில் துப்பரவு பணி மேற்கொண்ட பொழுது வெடிக்காத நிலையில் இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, இராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன், கிளிநொச்சி நீதிமன்ற நீதவனின் அனுமதியுடன் அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராமநாதபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
