கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டு வளாகத்திற்குள் பள்ளம் தோண்டியபோது ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த விடயத்தை உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டிகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.