Friday, February 20, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவிடை தெரியாத 9 ஆண்டுகள்; ஓயாத நீதிக்கான பேரணி!

விடை தெரியாத 9 ஆண்டுகள்; ஓயாத நீதிக்கான பேரணி!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடி 2017 பிப்ரவரி 20 அன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக தொடங்கிய போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்துள்ளது.

இன்று காலை 10:30 மணிக்கு கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலய முன்பாகத் தொடங்கிய ஆர்ப்பாட்டம், சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை உறவினர்கள் பேரணியாகச் சென்றனர்.

இப்போராட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும், கடந்த 16 வருடங்களாகத் தொடரும் தார்மீகக் கேள்விகளுக்குப் பதில் வேண்டியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக் குழுவினரின் முக்கிய குற்றச்சாட்டுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

அண்மையில் ‘டித்வா’ புயல் பாதிப்பிற்கு உலக நாடுகள் காட்டிய அக்கறையை, இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது காட்டவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்து ஐந்து அரசாங்கங்கள் மாறியும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.

நீதி கிடைக்காமல் ஏக்கத்துடனேயே இதுவரை 400-க்கும் மேற்பட்ட தாய், தந்தையர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் தங்களின் வாழ்நாளுக்குள் உண்மை தெரிய வேண்டும் எனப் போராடுகின்றனர்.

மனிதப் புதைகுழி ஆய்வுகளில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என்றும், குறிப்பாக செம்மணி போன்ற இடங்களில் அகழ்வுப் பணிகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முன்வைக்கப்பட்ட 8 கோரிக்கைகள்

போராட்டத்தின் இறுதியில் உறவினர்கள் பின்வரும் கோரிக்கைகளைச் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசிற்கும் வலியுறுத்தினர்:

  1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும்.
  2. அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
  3. பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் புதிதாகக் கொண்டுவரப்படும் பாதுகாப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  4. வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்.
  5. மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு வேண்டும்.
  6. பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் மீதான புலனாய்வுத் துறை அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
  7. பௌத்த மயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  8. தாயகப் பகுதியின் வளச் சுரண்டல் மற்றும் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

நீதி வேண்டிய இந்தத் தொடர் போராட்டம், தமிழ் மக்களின் தீராத வலியைச் சர்வதேச அரங்கிற்கு மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

விடை தெரியாத 9 ஆண்டுகள்; ஓயாத நீதிக்கான பேரணி!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடி 2017 பிப்ரவரி 20 அன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக தொடங்கிய போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்துள்ளது.

இன்று காலை 10:30 மணிக்கு கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலய முன்பாகத் தொடங்கிய ஆர்ப்பாட்டம், சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை உறவினர்கள் பேரணியாகச் சென்றனர்.

இப்போராட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும், கடந்த 16 வருடங்களாகத் தொடரும் தார்மீகக் கேள்விகளுக்குப் பதில் வேண்டியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக் குழுவினரின் முக்கிய குற்றச்சாட்டுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

அண்மையில் ‘டித்வா’ புயல் பாதிப்பிற்கு உலக நாடுகள் காட்டிய அக்கறையை, இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது காட்டவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்து ஐந்து அரசாங்கங்கள் மாறியும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.

நீதி கிடைக்காமல் ஏக்கத்துடனேயே இதுவரை 400-க்கும் மேற்பட்ட தாய், தந்தையர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் தங்களின் வாழ்நாளுக்குள் உண்மை தெரிய வேண்டும் எனப் போராடுகின்றனர்.

மனிதப் புதைகுழி ஆய்வுகளில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என்றும், குறிப்பாக செம்மணி போன்ற இடங்களில் அகழ்வுப் பணிகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முன்வைக்கப்பட்ட 8 கோரிக்கைகள்

போராட்டத்தின் இறுதியில் உறவினர்கள் பின்வரும் கோரிக்கைகளைச் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசிற்கும் வலியுறுத்தினர்:

  1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும்.
  2. அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
  3. பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் புதிதாகக் கொண்டுவரப்படும் பாதுகாப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  4. வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்.
  5. மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு வேண்டும்.
  6. பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் மீதான புலனாய்வுத் துறை அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
  7. பௌத்த மயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  8. தாயகப் பகுதியின் வளச் சுரண்டல் மற்றும் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

நீதி வேண்டிய இந்தத் தொடர் போராட்டம், தமிழ் மக்களின் தீராத வலியைச் சர்வதேச அரங்கிற்கு மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular