Friday, May 30, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச திட்டம்!

50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச திட்டம்!

கடல்சார் துறையை முன்னேற்றுவதற்காக 50,000 மாலுமிகளை உருவாக்கும் திட்டம்

50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்தும் வகையில் விசேட செயற்குழு ஒன்றின் கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவை பிரதி அமைச்சர் பணித ருவண் கொடிதுவக்கு தலைமையில் அண்மையில் (27) நடைபெற்றது.

தற்போது கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கடல்சார் துறை ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் வழங்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர், 50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கடல்சார் துறையை முன்னேற்றுவது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாக இருப்பதுடன் அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தின் தலையீடுகளை குறைவின்றி வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதன் போது இக்குழு மற்றும் அதனுடன் தொடர்பான உப குழுக்கள் சில ஸ்தாபிக்கப்பட்டதுடன் அவற்றுக்கான அங்கத்தவர்களின் பெயர்களும் பிரயோகிக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular