Monday, March 17, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News51 குடும்பங்களுக்கு நிலத்துடன் புதிய வீடுகள்!

51 குடும்பங்களுக்கு நிலத்துடன் புதிய வீடுகள்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கு நிலத்துடன் கூடிய புதிய வீடுகள்

(ஹல்துமுல்ல நாயபெத்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கான புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா)

நிலச்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்து இரண்டு ஆண்டுகளாக பூனாகலை மஹாகந்த தேயிலைத் தொழிற்சாலையில் வசித்து வந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (16) ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவின் பூனாகலை கபரகலை பிரிவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர், ஊவா மாகாண ஆளுநர், இராணுவத் தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹல்துமுல்ல நிலச்சரிவுக் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த 51 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா பத்து பேர்ச்சஸ் காணிப் பகுதிகளுடன் புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பத்து பேர்ச்சஸ் காணிப் பகுதியுடன் ரூ. 28 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கட்டப்படவுள்ளதுடன், 51 வீடுகள் கட்டும் திட்டத்திற்கான நிதி செலவை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஏற்கவுள்ளதுடன், இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இது கட்டப்படவுள்ளது.

வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன,

“இந்த வீடுகள் கட்டுவதற்கான பணம் தன்னுடைய அல்லது வேறு யாருடைய தனிப்பட்ட பணம் அல்ல, பொதுமக்களின் வரிப்பணம் என்றும், அதனால் தனக்கும் தனது குழுவினருக்கும் போடப்பட்ட மாலைகள் தமக்கோ அல்லது தமது குழுவினருக்கோ போடப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.

புதிய அரசாங்கம் பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பதவிக்கு வந்துள்ளதால், மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளில் தலையிடுவது அவசியம் என்றும், கடந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் வேலை செய்யவில்லை என்று தான் கூறவில்லை என்றும், ஆனால் முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியதை செய்யாததால் ஏற்பட்ட தவறுகளை எதிர்காலத்தில் சரிசெய்வோம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தமது அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்தவுடன் அனாதைகள் முகாம்களில் இருந்து வெளியேற்றி புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதேபோல் 2014 ஆம் ஆண்டு முதல் சமசர நிலச்சரிவுக் காரணமாக அனாதைகள் முகாம்களில் உள்ள 22 குடும்பங்களுக்கும் விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு அப்படி நேர்ந்தாலும் ஆட்சியாளர்களுக்கு அப்படி நடக்கவில்லை. வீடுகள் தீக்கிரையான பிறகு, மாதக்கணக்கில் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு பெற்றனர். இப்போது இந்த வீட்டுத் திட்டம் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சு இந்த வீடுகளுக்காக ரூ. 1800 லட்சம் ஒதுக்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு ஒரு வீட்டிற்கு சுமார் ரூ. 1300 லட்சம் செலவு செய்ததாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்”

இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தர லிங்க பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், பதுளை மாவட்ட மேலதிக செயலாளர், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் புதிய வீட்டு பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular