அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக பராமரிப்பு நிகழ்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மகாவலி மையத்தில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சு சிறுநீரக நோயை மிக விரைவாக வெற்றி கொள்ள வேண்டிய ஒரு சுகாதார சவாலாகக் காண்பதாகவும், இந்நாட்டில் பல குடும்பங்களை எல்லா வகையிலும் ஆதரவற்றவர்களாக ஆக்கும் இந்தநோய்க்கு உடனடித் தீர்வுகளைத் தேடுவதன் மூலம் இந்த குடும்பங்களுக்கு இந்நோயை சுகாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எதிர்கொள்ளத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் வழங்க வேண்டும் என்பதையும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
மேலும், தேசிய மற்றும் சர்வதேச ஆதரவைப் பெற்று இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும் எனவும், நோயைத் தடுப்பதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் அரசாங்கம் என்ற வகையில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் ஆரோக்கியத்தை அணுகுவதற்கான உரிமையை அடிப்படை மனித உரிமையாக புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.
அவ் உரிமை மீறப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் உதவியை மக்கள் நாட முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக சேவை நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கம் பல வருடங்களாக அரசாங்கத்தினால் செய்ய வேண்டிய பல முக்கிய பணிகளை செய்துள்ளது.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர்களின் வருடாந்த சமூகப் பாதுகாப்பு நிகழ்வில் எனக்கு சிறுநீரகச் சங்கத்தின் பாராட்டுகளும் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் குறித்த நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள், புலமைப்பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றன.