முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப் படுத்தப்பட்ட நிதியின் மூலம் உடப்பு ராக்குர்ஷி அம்மன் ஆற்று மீன்பிடி சங்கத்திற்கு ரூ. 500,000.00 பெறுமதியான மீன்பிடி வலைகள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய குறித்த மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை உடப்பு ராகுர்ஷி அம்மன் மீன்பிடி மற்றும் மகளிர் சங்கத்திற்கான ஒரு தொகை கதிரைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
கடந்த காலங்களில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் மக்களுக்கு செய்யப்பட சமத்துவமான சேவைகள் குறித்தும் பயனாளர்களினால் நினைவுகூரப்பட்டது.
முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களின் உடப்பு இணைப்பாளர் திரு. செல்வநாயகம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் BCMH நிறுவன செயற்திட்ட அதிகாரி எம்.எம். நௌபர் அதிதியாக கலந்து கொண்டு மீன்பிடி வலைகளை சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.