Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கை வந்த பாக்கிஸ்தான் போர்க்கப்பல்!

இலங்கை வந்த பாக்கிஸ்தான் போர்க்கப்பல்!

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ‘PNS ASLAT’ இன்று (2025 பெப்ரவரி 01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, மேலும் கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படை கப்பலை வரவேற்றது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள ‘PNS ASLAT’ என்ற Frigate (FFG) ரக கப்பல் 123 மீட்டர் நீளமும் மொத்தம் 243 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் MUHAMMAD AZHAR AKRAM கடமைப்புறிகிறார்.

மேலும், ‘PNS ASLAT’ போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கப்பலின் அங்கத்தவர்கள் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர்,

மேலும், ‘PNS ASLAT’ என்ற கப்பல் 2025 பெப்ரவரி 4 அன்று தீவிலிருந்து புறப்படவுள்ளது. மேலும், இலங்கை கடற்படை கப்பல் ஒன்றுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்கரையில், ஒரு கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular