கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது என தேர்தல்கள் தேர்வத்தாச்சியாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் பல கட்டுப் பணங்களோ, வேட்டுபுமனுக்களோ செலுத்த முடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் தேர்வத்தாச்சியும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய எஸ். முரளிதரன் இன்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
மேலும் வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், வேட்பு மனுக்களை மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெறிவித்துள்ளது என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்