Thursday, March 13, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகிளிநொச்சியில் சுற்றுலா மையம்!

கிளிநொச்சியில் சுற்றுலா மையம்!

கிளிநொச்சி குளப் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று ஆளுநர் அவர்களால் திறந்து வைப்பு!

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு இன்று 12.03.2025 குறித்த சுற்றுலா மையம் திறந்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுலா மையத்தை சமய நிகழ்வுகளுடன் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முகமாக, கிளிநொச்சி குளத்தினுள் விசைப் படகு, துடுப்பு படகு சவாரி ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரம்பரிய உணவுகள், இயற்கை குளிர்பானங்கள் என்பனவும், சிறுவர்களுக்கு எற்ற விளையாட்டுகள் என இவ் சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில் வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், வைத்தியர்கள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular