Saturday, April 19, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவிஷேட வீதிப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பம்!

விஷேட வீதிப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பம்!

வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன்களை வளர்ப்பதற்கான தேசிய திட்டம் ஆரம்பம்.

நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பெருந்தெரு அமைப்பில் வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ‘தேசிய வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன் மேம்பாட்டுத் திட்டம்’ நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நிகழும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துகளைக் குறைப்பதும், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதுமே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அபராதம் விதித்தல் ஆகியவற்றுடன், பொதுமக்கள் மற்றும் சாரதிகளின் மனப்பாங்கை இது மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘தேசிய வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன் மேம்பாட்டுத் திட்டம்’ உயிர்களைக் காப்பாற்றும் என்றும், வீதி விபத்துகளால் குடும்ப பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular