இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் தலைமன்னார், கல்பிட்டி மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோ முந்நூற்று எண்பது (380) கிராம் பீடி இலைகளுடன் (01) டிங்கி படகினை கடற்படையினர் கைது செய்தனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையோரங்களை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, 2025 ஏப்ரல் 26 அன்று, தலைமன்னார், மணல்திட்டை சுற்றியுள்ள கடல் பகுதியில், வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சிறப்பு கடற்படைப் படைக் குழு 94 கிலோ 880 கிராம் பீடி இலைகளையும், வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயா நிறுவனம் குடாவ கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 150 கிலோ பீடி இலைகளுடன் ஒரு டிங்கி படகையும், 2025 ஏப்ரல் 27 அன்று, நீர்கொழும்பு களப்பு பகுதியில், மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெளனி நிறுவனம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 398 கிலோ 500 கிராம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் 18 பைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன். அதன் மொத்த எடை 643 கிலோகிராம் 380 கிராம் ஆகும்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சேர்த்து டிங்கி படகும், மன்னார் மற்றும் புத்தளம் மதுவரி விசேட பிரிவினரிடமும், கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.
