நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், தற்போது சந்தையில் 245 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.