காலி மாவட்ட ஊடகப் பிரிவு இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 2025 – 49 வது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் நடாத்தப்படுவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (18) காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2025ஆம் ஆண்டின் 49வது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் நடைபெறுவது, காலிக்குக் கிடைத்த விசேட சந்தர்ப்பமாக விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.