Wednesday, July 16, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவிடைபெற்றது ‘பாத்திய’ காட்டு யானை!

விடைபெற்றது ‘பாத்திய’ காட்டு யானை!

நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானை உயிரிழந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தன்கொல்ல தலைமையிலான குழு, பொல்பிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் இருந்த ‘பாத்திய’ யானைக்கு சிகிச்சை அளிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. 

எனினும், தசைச் சிதைவு மற்றும் பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக யானை ஆபத்தான நிலையில் இருந்ததாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்தனர். 

பல நாட்களாக ஒரே பக்கத்தில் இருந்த பாத்திய, நேற்று (14) மறு பக்கத்திற்கு திருப்பப்பட்டது. 

பேராசிரியர் அசோக தன்கொல்லவின் அறிவுறுத்தலின் பேரில், வைத்தியர் தரிந்து விஜேகோன், வனவிலங்கு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து தேவையான பணிகளை மிகுந்த முயற்சியுடன் மேற்கொண்டார். 

இந்நிலையில், 30-35 வயது மதிக்கப்பட்ட ‘பாத்திய’ யானை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (15) காலை உயிரிழந்தது. 

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular