“மருதங்களின் சமர் “2025 துடுப்பாட்ட போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் கல்வியை வழங்குகின்ற பூநகரி மத்திய கல்லூரி மற்றும் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி அணிகள் மோதுகின்ற இரண்டாவது மருதங்களின் சமர் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் 17ம் திகதி பூநகரி மத்திய கல்லூரி மைதானத்தில் மென்பந்து போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்த வருடம் இரு கல்லூரியின் பெண்களுக்கான மருதங்களின் சமர் துடுப்பாட்ட தொடரும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இரண்டு போட்டிகளுக்குமான வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வு பூநகரி மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இராமலிங்கம் பாலச்சந்திரன், பூநகரி மத்திய கல்லூரி முதல்வர் அரசரட்ணம் பங்கையற்செல்வன், முருகானந்தா கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
