சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவிற்கு புறப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் நேற்று (15) இரவு சீனாவிற்கு பயணமானார். அதன்படி, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, பதில் பொலிஸ்மா அதிபராக செயல்பட நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் நடைபெறும் மாநாட்டில் பிரியந்த வீரசூரிய உரை நிகழ்த்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு, பொலிஸ்மா அதிபர் செப்டம்பர் 20 அன்று நாடு திரும்பவுள்ளார்.