கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய, அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் வழமைப் போல் நீர்விநியோகம் தடையின்றி நாளைய தினம் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால், நாளை முற்பகல் 10:00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளும், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுலாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த பிரச்சினை சீரமைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளுக்கு நாளைய தினம் வழமைப் போல நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.